தாருல் அதரின் இஸ்லாமிய கொள்கை விளக்க மாநாடு
எமதுஅமைப்பின் ஏற்பாட்டில் ‘இஸ்லாமிய கொள்கை விளக்க மாநாடு’ சென்ற (06.01.2012) மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக அக்கரைப்பற்று தத்பீகுஷ் ஷரீஆ அல்-இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும் கிழக்கிழங்கைப் பேச்சாளருமான மௌலவி எம்.ஐ. அன்சார் (தப்லீகி) கலந்து கொண்டு ‘நபிகளாருக்கு சூணியம் செய்யப்பட்டதா?’ எனும் தலைப்பில் விஷேட உரை நிகழ்த்தியதுடன் எமது அமைப்பின் பிரச்சாரகர்களுள் ஒருவரான மௌலவி எஸ்.எல்.எம். நஷ்மல் (பலாஹி) ‘வஹி தனித்துவமானது’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அது மட்டுமன்றி சூணியம் சம்பந்தமாக விஷேட கேள்வி பதில் நிகழ்ச்சி சுமார் அரை மணி நேரம் இடம்பெற்றது
இந்நிகழ்வின் நேரடி ஒலிபரப்பினை www.zajilfm.com மற்றும் www.srilankanmoore.com ஆகிய இணையத்தளங்களினூடாக நேரடி ஒலிஇ ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதன்போது பொது மக்கள் மத்தியில் சூணியம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள், தெளிவின்மை தொடர்பாக பூரண விளக்கம் அளிக்கப்பட்டதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பூரணமாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. குறித்த இம்மாநாட்டிற்கு ஊர் புத்திஜீவிகள், உலமாக்கள், பெரந்திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் சமூகம் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








Comments are closed.