Skip to content

மணவாழ்வில் மகிழ்வுற‌..

November 21, 2009

இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்

____________________________________________________________________________________________________

சில சமயங்களில் கணவன் மனைவியின் நல்ல பண்புகளை மறந்து தவறுகளைப் பெரிதாகக் கருதுகின்றவனாக இருந்து விடுகின்றான். நபியவர்கள் கோணலும் குறையும் பெண்ணின் இயற்கையோடு ஒட்டியது என்று கூறிச் சென்று விட்டார்கள். எனவே அவளோடு நடந்து கொள்ளும் போது இயற்கைத்தன்மையை மறந்துவிடக்கூடாது. இதனையே நபியவர்கள் பெண்களுக்கு நல்லதையே நாடுங்கள்..என்ற முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலே

‘பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2912,2913)

அந்த வகையில் மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்…

____________________________________________________________________________________________________

“இப்லீஸ் தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கின்றான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (க்கவில்லை’ என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்த்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து ‘நான் இன்னின்னவாறு செய்தேன்’ என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், ‘(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை’ என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, ‘நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைது, ‘நீதான் சரி(யான ஆள்)’ என்று (பாராட்டிக்) கூறுவான் என்று அழ்ழாஹ்வின் தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5419)

நாம் எதிர்பார்த்தது என்ன? ஆனால் திருமணம் என்பது இவ்வளவு இன்னல்கள் நிறைந்ததா? என தலையில் கைவைக்கும் நமது இளசுகளுக்கு இக்கட்டுரையில் சில ஆலோசனைகளை முன் வைக்கலாம் என விரும்புகின்றோம்.

____________________________________________________________________________________________________

‘இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை.’ (அல்குர்ஆன் 02:229)

மனிதன் என்கின்ற வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தனது மனைவிமார்களுடன் சில பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளார்கள் என்கின்ற விடயத்தையும், எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதனையும் நபிமொழிகளின் ஒளியில் உங்களோடு பகிர்ந்து கொண்டோம். அதன் தொடரில் இவ்விதழில் சில நபித்தோழர்கள் தமது மனைவிமார்கள் விடயத்தில் அவசரப்பட்ட போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பதை இவ்விதழில் நோக்குவோம்…

____________________________________________________________________________________________________

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers