Skip to content

நாங்கள் சொல்வதென்ன?

November 19, 2007

islamic10.jpg

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான நபி மொழிகளை மட்டுமே பின்பற்றுமாறு சொல்கின்றோம்.

“(மனிதர்களே!)நீங்கள் இறைவனிடம் இருந்து இறக்கி வைக்கப்பட்ட (வஹியை) மாத்திரம் பின்பற்றுங்கள்!

(சூரதுல் அஃராப்)”


என்கின்ற அல்‍குர்ஆனது கூற்றுக்கிணங்க வஹி அடிப்ப்டையில் இல்லாத மக்களால் சட்ட மூலாதாரமாகக் கருதப்படும் மத்ஹபுகள் இஜ்மா கியாஸ் பெரியார் கூற்றுக்கள் போன்றவற்றை எதிர்க்கின்றோம்.

முஸ்லிம்களுக்கு மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துச் சொல்லி அதன் படி அமல் செய்யுமாறு அழைக்கின்றோம். நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

“மக்களே!உங்களை நான் வெள்ளை வெளீரென்ற பிரகாசமான மார்க்கத்தில் விட்டுச்செல்கின்றேன் அழிவை நோக்கிப் பயனிப்பவன் தான் வழிகெடுவான்”

(ஆதாரம் ஸஹீஹுல் புஹாரி)


இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் தெளிவில் விட்டுச்சென்றிருக்கும் நிலையில் மார்க்கத்திற்கும் பகுத்தறிவிற்கும் சேறு பூசும் அவ்லியாக்களின் பெயரில் உருவான கட்டுக்கதைகளை எதிர்க்கின்றோம்

இனைவைத்தல்(ஷிர்க்)அது எந்த வடிவில் இருந்தாலும் அதனை எச்சரிக்கை செய்கின்றோம் அல்லாஹுத்தஆலா அல்‍குர்ஆனில்

“இனைவைத்தலைத் தவிர ம‌ற்ற‌ப் பாவ‌ங்களை தான் நாடியவர்களுக்கு ம்ன்னிக்கின்றான். அல்லாஹுத்தஆலாவுக்கு யார் இனணகற்பிக்கின்றாரோ அவர் தூரமான‌ வழிகேட்டில் இருக்கின்றார்” (சூரதுன் நிஸா வசனம்)


தடுக்கிவிழுந்தால் யாமுஹ்யித்தீன்(முஹ்யித்தீனே!எனைக்காப்பாற்றுங்கள்!)என அழைப்பது கப்ரைமுத்தமிடுவது, மெளலூது, வித்ரிய்யா, யாகுத்பா, புர்தா போன்ற ஷிர்க்கான வார்த்தைகள் நிரம்பிய பாடல்களை பாடுவது போன்ற செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளியளவும் சம்மந்தம் கிடையாது என்று உறுதியாய்க் கூறுகின்றோம்

பித் அத் (நூதன அனுஷ்டானங்கள்) இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகள், இஸ்லாத்தின் பொயரால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் கதைகள் பலஹீனகான செய்திகள்போன்றவற்றை எதிர்க்கின்றோம்.
நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்:

“எம்முடைய மாக்கத்தில் இல்லாதஒன்றை யார் புதிதாக உருவாக்கின்றாரோ அச்செயல் மறுக்கப்படவேண்டியது.”

(ஆதாரம் ஸஹீஹுமுஸ்லிம்)அறிவிப்பாளர் அன்னைஆயிஷா(ரழி)

மார்க்கத்தில் இல்லாத‌ மீலாதுவிழா, தாயத்துக்கட்டுதல், இஸ்ம், எழுதிக்கரைத்துக்குடித்தல், தல்கீன் ஓதுதல், சுப்ஹில் குனூத் ஓதுதல், கூட்டுதுஆ, இருட்டுதிக்ர், தரீக்காகந்தூரி போன்றவற்றை மிகவன்மையாய்க் கன்டிக்கின்றோம்.

யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள்! யார்சொன்னாலும் அதனை அல்குர்ஆன் மற்றும் ஸ‌ஹீஹான ஹதீஸ்களோடு சரி பார்த்து விள‌ங்கிப்பின்பற்ற வேண்டும் என்கின்றோம்.

கால‌மெல்லாம் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் தனிமனிதக்கருத்துக்கள் மார்க்கச்சாயம் பூசப்பட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட உரைகள் போன்றவற்றைப் பின்பற்றக் கூடாது என்கின்றோம்.
இஸ்லாமிய வாழ்வுமிளிரவும் அல்லாஹ்வுடைய தீனை இப்பூவியில் நிலைநாட்டுகின்ற ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபடுகின்றோம்.

அல்லாஹ்வின் தீனை அனைவரும் சேர்ந்து கட்டியெழுப்பவேண்டும் என்பதற்காய் அரபுநாடுகளின் உதவிகளை எதிர்பாராமல் சொந்தநிதியினைக் கொண்டே இதற்காப்பாடுபடுகிறோம்.

இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட சுதந்திரமான இஸ்லாமிய சிந்தனையைத் தூண்டுகின்றோம்.

மேலும் முஸ்லிம்களிடம் காணப்படும் அறிவு ரீதியான தேக்கநிலையை நீக்கப்பாடுபடுவதோடு விஞ்ஞான தகவல்களை வழங்கி பிறமொழிரீதியான முஸ்லிம்களின் பின்னடைவையும் இஸ்லாமிய அரசியல் பற்றிய முஸ்லிம்களின் அசமந்தப்போக்கினை அகற்றப்பாடுபடுகின்றோம்

பெண்களுக்கெதிரான சீதனக்கொடுமை இளைஞர் யுவதிகளை சீரழிக்கும் சினிமாக்கலாச்சாரம் சமூகவிரோதச்செயல்கள் போன்றவற்றைக் கண்டிக்கின்றோம்.

சத்தியத்தை மறைத்தல் சத்தியத்துடன் அசத்தியத்தைக்கலத்தல் சத்தியத்தில் விட்டுக் கொடுப்பு போன்றவற்றை எதிர்க்கின்றோம்.

இஸ்லமியத்தூது எனும் அமானிதத்தை சுமக்கும் பணியில் எம்மோடு இணைந்து செயற்பட அனைத்து சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்..

quran2.jpg

எமது கடமை தெளிவாகச் சொல்வதே அன்றி வேறில்லை”

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers